கெஜ்ரிவால் வெளியேற்றபட்ட காட்சி!
தமிழ்
AAP தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல பொதுமக்கள், தெற்கு தில்லி வட்டாரத்தில் உள்ள கட்டிடங்கள் இடிப்புக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை காட்டியபோது , முதல்வர் ஷீலா தீட்சித் வீட்டிற்கு வெளியே இன்று கைது செய்யப்பட்டனர். 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அருகில் ஷாஹின்பாக் வட்டாரத்தில் உள்ள தங்கள் வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலை 7 மணி முதலே எண் 3 ,மோதிலால் நேரு மார்க் குடியிருப்பில் உள்ள தீட்சித் வீட்டிற்கு வெளியே கூடி அவரிடம் பேசவேண்டும் என கோரினர். கெஜ்ரிவால் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அங்கு வந்து சேர்ந்தார். எதிர்ப்பாளர்கள் முதல்வர் வீட்டிற்கு வெளியே தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அவர்கள் இடத்தை விட்டு நகர மறுக்கவும்,காவல்துறையினர் மதியம் 12:30 மணிக்கு அவர்களை கைது செய்தனர்.
Topic: