புதுடில்லி:
பிரபல இலக்கியவாதியும், சாகித்ய அகாடமி தலைவருமான சுனில் கங்கோபாத்யாயா (78) மாரடைப்பால் காலமானார்.
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த இவர் 200-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். கடந்த 1985-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட இலக்கியத்திற்கான பல்வேறு விருதுகளை பெற்றார்.
இதே அமைப்பின் தலைவராக 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தெற்கு கோல்கட்டாவில் உள்ள அவரது வீட்டில் கங்கோபாத்யாயா காலமானார்.
Undefined
Topic:
புதிய கருத்தை சேர்