தமிழர் பாரம்பரிய விழாவான பொங்கலையொட்டி, நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் அருகிலுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
போக்குவரத்து மாற்றங்கள்
விழாவுக்கு மக்கள் கூட்டம், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றனர். இதனால், நெரிசல் ஏற்படாமல் கட்டுப்படுத்த மதுரை மாநகர காவல்துறை நாளை காலை 9 மணிக்கு இருந்து போக்குவரத்து மாற்றம் செயல்படுத்துகிறது.
திருப்பரங்குன்றம் வழித்தடங்கள்
அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பு மற்றும் அவனியாபுரம் அம்பேத்கர் சிலை சந்திப்பு வழியாக வாகனங்கள் செல்ல தடை.
திருப்பரங்குன்றம் செல்லும் வாகனங்கள் அவனியாபுரம் பைபாஸ் மற்றும் வெள்ளைக்கல் வழியாக செல்ல வேண்டும்.
முத்துப்பட்டி சந்திப்பு
முத்துப்பட்டி சந்திப்பில் இருந்து அவனியாபுரம் செல்லும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டது.
மாற்று வழிகள்:
வெள்ளைக்கல் பிரிவு → கல்குளம் → அவனியாபுரம் பைபாஸ்
மதுரை நகரம் அல்லது பெருங்குடி நோக்கி செல்லும் வாகனங்களுக்கு இந்த வழிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
வாகன நிறுத்தம்
ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றிய வாகனங்கள்:
காளைகளை திருப்பரங்குன்றம், முத்துப்பட்டி சந்திப்பில் இறக்கிவிட்டு, வெள்ளைக்கல் வழியாக வைக்கம் பெரியார் நகர் ரோடு அல்லது வெள்ளைக்கல் கிளாட்வே கிரவுண்டில் நிறுத்தவேண்டும்.
பொதுமக்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்:
மதுரை நகரில் இருந்து வருவோர் டி. மார்ட் வணிக வளாகத்தில் வாகனங்களை நிறுத்தலாம்.
பெருங்குடி மற்றும் செம்பூரணி பகுதியில் இருந்து வருவோர், K4 உணவகத்தின் அருகிலுள்ள வாகன நிறுத்தம் பயன்படுத்தலாம்.
திருப்பரங்குன்றம் மற்றும் முத்துப்பட்டி வழியாக வருபவர்கள்:
SP பள்ளி வளாகத்தில் வாகனங்களை நிறுத்த முடியும்.
விழா வெற்றிக்கான கோரிக்கை
போக்குவரத்து மாற்றங்களை மதுரை மாநகர காவல்துறை அறிவித்ததுடன், ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடைபெற பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் காளைகளை கொண்டு வருபவர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
விழா நடைபெறும் இடத்தில் வழிநடத்தை பின்பற்றியும், காளைகளின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.