தமிழக பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா? அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்ப்பு!

0454.jpg

சென்னை: தமிழ்நாடு 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் மார்ச் 14 அன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வரும் என்பதைப் பற்றிய எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வரும் என எதிர்பார்க்கலாமா?

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், இந்த திட்டத்தை ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு விரைவில் தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்கவுள்ளது.

ஓய்வூதிய திட்டங்களில் நடந்த மாற்றங்கள்

2003 முதல் தமிழக அரசு பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) அறிமுகப்படுத்தப்பட்டது.2004 முதல், ஒன்றிய அரசு தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) செயல்படுத்தியது.2025 ஜனவரி 24, ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.கர்நாடகா அரசு சமீபத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தது, இதனால் தமிழக ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்பர் விளக்கம்

முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2022ல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது சாத்தியமற்றது என்று கூறியிருந்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகும், ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் செலவு ரூ.50,000 மட்டுமே என்பதால் நிதிநிலை காரணங்களால் பழைய ஓய்வூதியம் திரும்ப அமல்படுத்த முடியாது என தெரிவித்திருந்தார்.

தங்கம் தென்னரசு – புதிய முடிவா?

இந்த நிலையில், புதிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மார்ச் 14-ல் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வருவாரா? என்பது அரசுத்துறைகளில் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும், நிதி நிலையும் கருத்தில் கொண்டு எந்த முடிவை எடுக்கிறது என்பதை பட்ஜெட் நாளில் தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top