தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய பொங்கல் விழா!

0129.jpg

கோலாகலமான பொங்கல் பண்டிகை:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்று முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பாரம்பரிய பொங்கல் விழா சிறப்பாக நடந்தது.

துணைவேந்தர் பங்கேற்பு:
பலகலைக்கழக துணைவேந்தர் கீதாலெட்சுமி, மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பொங்கல் வைத்து வழிபாடு செய்தார்.

பசுமாடுகளின் பரிசோதனை:
நிகழ்வின் முக்கிய பகுதியாக 9 பட்டிகளில் பசுமாடுகள் விடப்பட்டு, தண்ணீர் மற்றும் நவதானியங்களை மிதித்துச் சென்றது. இதனை, இந்த ஆண்டு மழைப்பொழிவும் விளைச்சலும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடையாளமாகக் காணப்பட்டது.

900 ரகங்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம்:
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணைவேந்தர் கூறியதாவது:

  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், உழவர்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
  • 900க்கும் மேற்பட்ட பயிர் ரகங்களை வளர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, இந்தியாவின் உணவுத் தயாரிப்பு 50 மில்லியன் டன்னிலிருந்து 325 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
  • பல்கலைக்கழகம் இதுவரை 1500 தொழில்நுட்பங்களை உழவர்களுக்கு வழங்கி உதவியுள்ளது.

சமத்துவ பொங்கல் விழா:
கோவையில் காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆசியாவேலேயே பெரிய முந்தி விநாயகர் கோவிலின் முன்பாக நடைபெற்றது.
விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு கரும்பு மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக நடைபெற்றது.

பொங்கல் விளையாட்டு விழா:
இதேபோல, இராமநாதபுரம் பகுதியில் மாற்றம் கிளப் இளைஞர்கள் நடத்திய பொங்கல் விளையாட்டு விழாவில் சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், சைக்கிள் போட்டி, லெமன் ஸ்பூன் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, சிறுவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

பாரம்பரியம் மற்றும் உற்சாகம்:
இந்த விழாக்கள் தமிழர்களின் பாரம்பரியத்தையும் ஒற்றுமையையும் விளக்கும் நிகழ்வுகளாக அமைந்து, பண்டிகையின் மகத்துவத்தை மேம்படுத்தின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top