திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: நெல்லையில் இந்து முன்னணி தலைவர்கள் கைது!

0405.jpg

நெல்லை: திருப்பரங்குன்றம் மலை மீட்பு போராட்டத்திற்காக நெல்லையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்ட இந்து முன்னணி உறுப்பினர்கள், நடுவழியில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 திருப்பரங்குன்றம் மலை மீட்பு போராட்டம் – போலீசார் பாதுகாப்பு

இந்து முன்னணி, திருப்பரங்குன்றம் மலை மீட்பு போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
மலை மற்றும் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
அத்துமீறி நுழைவோரின் மீது காவல்துறை நடவடிக்கை



 வீட்டு காவலிலும் தடுப்பு நடவடிக்கையும்!

போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த முக்கிய நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்
நெல்லை மாநகர பகுதியில் உள்ள இந்து முன்னணி நிர்வாகிகளும் கண்காணிக்கப்பட்டனர்


 வழியில் தடுத்து, கைது!

இன்று காலை, இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர், திருப்பரங்குன்றம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
நெல்லை மாநகர காவல் உதவி ஆணையாளர் செந்தில் குமார் தலைமையில் போலீசார், நடுவழியில் அவர்களை தடுத்து, கைது செய்தனர்.


 புனித நீர் கொண்டு செல்ல முற்பட்டவரும் கைது!

வண்ணார்பேட்டை தாமிரபரணி நதிக் கரையில் இருந்து, திருப்பரங்குன்றம் மலைக்கு புனித நீர் கொண்டு செல்ல திட்டமிட்டிருந்த இந்து மக்கள் கட்சி மாநில துணை தலைவர் உடையார், வீட்டிலேயே காவல் துறையால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், போலீசாரின் தடுப்பும், இந்து அமைப்புகளின் எதிர்ப்பும் மோதும் சூழ்நிலையில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top