You are currently viewing திருப்பூர்: செல்போன் பறிக்க முயன்ற இருவர் கைது

திருப்பூர்: செல்போன் பறிக்க முயன்ற இருவர் கைது

0
0

திருப்பூர் அங்கேரிபாளையம் துண்டுக்காடு பகுதியைச் சேர்ந்த ஜோதிராஜ் (20), பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று, பெரியார்காலனியில் இருந்து அங்கேரிபாளையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, பனியன் நிறுவனம் அருகே நான்கு பேர் கொண்ட கும்பல் ஜோதிராஜை திடீரென வழிமறித்தது.

கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து பணம் மற்றும் செல்போன் பறிக்க முயன்ற அந்த கும்பலைத் தடுத்து, ஜோதிராஜ் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, சந்தேகநபர்கள் நரசிம்ம பிரவீன் (28) மற்றும் விக்னேஷ் (கூழை கணேசன், 30) ஆகியோரைக் கைது செய்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய மற்றோர் நபர்கள் அருண் மற்றும் ராஜாவை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply