தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஹீரோயினை மையப்படுத்திய கதைகளில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் அவர் தனது இடத்தை உருவாக்க முயன்று வருகிறார். இதற்கிடையே அவர் கொடுத்த ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில் வளர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
மானாட மயிலாட நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அடையாளம் காட்டிய அவர், அவர்களும் இவர்களும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் போன்ற பல படங்களில் நடித்தார்.
“காக்கா முட்டை” படம் இவரது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. இப்படத்தில் ஒரு தாயின் கதாபாத்திரத்தில் அவர் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். அதன்பிறகு தர்மதுரை, குற்றமே தண்டனை, வடசென்னை போன்ற வெற்றிப் படங்கள் அவருக்கு முன்னணி நடிகையாக இருக்க உதவின.
தெலுங்கில் வாய்ப்புகள் குறைவு?
தமிழில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தெலுங்கு திரையுலகிலும் நல்ல வாய்ப்புகளுக்காக முயன்றார். ஆனால் சங்கராந்தி வஸ்துனானு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும், அதன்பிறகு அவர் தெலுங்கில் எதிலும் கமிட் ஆகவில்லை.
தனது நிலையை விளக்கும்போது, “நான் நடித்த சங்கராந்தி வஸ்துனானு படம் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் அதற்கு பிறகு எனக்கு எந்த ஒரு தெலுங்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை” என அவர் ஆதங்கத்துடன் கூறினார். மேலும், “தெலுங்கு திரையுலகினரும், ரசிகர்களும் எனக்குத் தொடர்ந்து வாய்ப்பு தர சிறிது கால அவகாசம் எடுக்கலாம் என நினைக்கிறேன். குறிப்பாக, நான் கமர்ஷியல் ஹீரோயின் அல்ல. அதனால் வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகிலும் எதிர்பார்ப்பு
இது மட்டும் அல்லாமல், அவர் மலையாளத்தில் “புலிமடா” படத்தின் மூலம் அறிமுகமானார். ஜோஜு ஜார்ஜ் நடித்த அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், மலையாள சினிமாவில் ஒரு ரவுண்டு வரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், மீண்டும் தெலுங்கில் நல்ல கதைகளுடன் திரும்புவாரா? என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.