தமிழ் சினிமாவில் ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை அபிநயா, சமீபத்தில் தனது காதல் வாழ்க்கை குறித்து திறந்த மனத்துடன் பேசினார்.
15 ஆண்டுகளாக காதல் உறவு!
அபிநயா, சிறுவயதில் இருந்து பழக்கப்பட்ட நண்பருடனேயே காதல் வாழ்க்கையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். “நான் தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன். என்னோட சிறுவயது நண்பனே என் பாய் பிரண்ட். 15 வருடங்களாக உறவு தொடர்கிறது. எங்களுக்கு எந்த விதமான ஜட்ஜ்மெண்டும் இல்லாத ஒரு நல்ல தொடர்பு உள்ளது” என்று கூறினார்.
திருமண திட்டம் இல்லை!
திருமணம் தொடர்பாக தற்போது எந்த திட்டமும் இல்லை எனவும், வாழ்க்கையில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்பதாலேயே எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
விஷால் தொடர்பான வதந்திக்கு விளக்கம்
சமீபத்தில் நடிகர் விஷாலுடன் காதலில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் ஆகப்போகிறதெனவும் சில வதந்திகள் பரவியது. இதுகுறித்து விளக்கம் அளித்த அபிநயா, “இது எல்லாம் வெறும் முட்டாள்தனமான தகவல்கள். விஷால் எனக்கு ப்ரபோஸ் பண்ணினார் என்றெல்லாம் யாரும் நம்ப வேண்டாம்!” என்று கடுமையாக மறுத்தார்.
அபிநயாவின் இந்த விளக்கம் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த தெளிவை அளித்துள்ளது.