சிறுநீரகங்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது சில அறிகுறிகளை ஏற்படுத்தும். அந்த அறிகுறிகள் பெரும்பாலும் தினசரி வாழ்வில் சந்திக்கும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகள் போல தோன்றுவதால், பலர் கவனிக்காமல் புறக்கணிக்கலாம். சமீபத்திய ஆய்வுகளின் படி, இந்தியாவில் சுமார் 37 மில்லியன் மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 90% பேர் மிகுந்த பாதிப்புகள் ஏற்படும் முன்னர் இந்த பிரச்சனையை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்கிறார்கள். சிறுநீரக நோயின் ஆரம்ப அறிகுறிகளை அறிந்து சரியான சிகிச்சை பெறுவது மிக முக்கியம். இங்கே சில முக்கியமான இரவு நேர அறிகுறிகளை, இது சிறுநீரகங்களில் பிரச்சனை இருப்பதை பார்க்கலாம்.
-
இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை சர்க்கரை நோயின் அறிகுறியாக பலர் நினைக்கின்றனர், ஆனால் இது சிறுநீரகங்களின் பாதிப்பு ஆக இருக்க வாய்ப்பு உண்டு. சிறுநீரகங்கள் சேதமடைந்தால், அவை சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும், இதனால் இரவு அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். -
தூக்கத்தில் சிரமம்
சிறுநீரக நோ -
தூக்கத்தில் மூச்சுத்திணறல்
சிறுநீரக நோய -
தசைப்பிடிப்பு
சிறுநீரக நோயின் போது, உடலில் கால்சியம் குறைந்து, பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும்போது, இரவு நேரங்களில் கடுமையான தசைப்பிடிப்புகள். -
வீக்கம்
சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, உடலில் சோடியம் அதிகரித்து, பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படும். இது இரவு நேரங்களில் அதிகமாக தெரியும். -
தோல் அரிப்பு
சரும வறட்சி மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகள் சிறுநீரக செயல்பாடுகளால் பாதிக்கப்படுகின்றன. இந்த அறிகுறி இரவு நேரத்தில் தீவிரமாகிறது. -
இரவு நேர உயர் இரத்த அழுத்தம்
இரவு நேரத்தில் உடலின் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், அது சிறுநீரக பாதிப்பைக் குறிக்கலாம். -
சுவாசிப்பதில் சிரமம்
சிறுநீரக செயல்பாடு குறைவதால், நுரையீரலில் திரவம் குவிந்து சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. -
வாய் துர்நாற்றம்
சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால், ரத்தத்தில் நச்சுகள் அதிகரித்து, வாயில் துர்நாற்றம் அல்லது உலோகச் சுவை ஏற்படும்.
இந்த அறிகுறிகளுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் நிலையில், உடனே ஒரு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தத் தகவல் இணையதளங்களில் கிடைக்கும் ஆய்வுகள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை நம்புவதற்கு முன், சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)