பூட்டிய வீட்டிற்கு ரூ.7 லட்சம் மின் கட்டணம் – அதிர்ச்சியடைந்த வியாபாரி!

0252.jpg

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி முருகேசன் என்பவரின் வீடு கடந்த 2 ஆண்டுகளாக காலியாக பூட்டிக் கிடக்கிறது. வீட்டை அவரின் உறவினர் ரவிச்சந்திரன் பராமரித்து வருகிறார்.

இந்நிலையில், ஆளில்லா வீட்டிற்கு மின்வாரியத்திலிருந்து ரூ.7,46,001 மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற குறுஞ்செய்தி வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன், உடனடியாக மின்வாரிய அலுவலகத்தில் விசாரித்தார்.

அதிகாரிகள் இது தவறுதலாக ஏற்பட்ட நிலைமை என்றும், கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் وضதகவல் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *