“மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எங்கே? – அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

0014.jpg

மும்மொழிக் கொள்கையை தமிழக அரசுக்கு எதிராக பயன்படுத்தி, மத்திய அரசு தமிழகத்தை மிரட்டுகிறது என திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதனைத் தொடர்ந்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எங்கே இருக்கிறார்? என அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்து

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,

“தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையையும் மும்மொழிக் கொள்கையையும் ஏற்க மறுக்கிறது. இதனால் தமிழகத்திற்கு மத்திய நிதி வழங்க முடியாது.”எனக் கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி.க்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

செந்தில் பாலாஜியின் தாக்கு

இதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எந்த விதமான மறுப்பும் பதிவு செய்யவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவரது அறிக்கையில்,

“தமிழ்நாட்டின் உரிமையை காப்பாற்ற வேண்டும் என அனைவரும் ஒன்றிய பாஜக அரசின் மீர்ச்சியைக் கண்டித்து வருகிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டிருக்கிறார். திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி, மாநில நலனுக்காக பேசத் தயங்குகிறாரே?”
என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,

  • “தமிழ்நாட்டு மக்களை மிரட்டும் பாஜக அரசை எதிர்க்காமல், ஒதுங்கியிருக்கிறார்”
  • “எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும், மாநில நலனுக்காக குரல் கொடுக்கத் தயங்குகிறார்”
  • “அண்ணாவின் பெயரை பயன்படுத்தும் உண்மைப் பொருள் தெரிந்துகொள்ள வேண்டும்”

என அவர் சாடியுள்ளார்.

இந்த சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி பதில் தருவாரா? அல்லது இன்னும் அமைதியாக இருக்கப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *