ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று “மௌனம் பேசியதே”. இந்த தொடர் ஆரம்பித்து மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை, இந்நிலையில் அதன் ஹீரோயின் ஜோவிதா லிவிங்ஸ்டன் (பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள்) திடீர் விலகல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதிர்ச்சி காரணம்
சீரியலில் இருந்து விலகியதை பற்றி ஜோவிதா தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“ஒரு நல்ல எதிர்காலத்திற்காக இந்த முடிவை எடுத்தேன். என் கேரக்டரான துளசி ரோல் எனக்கு திருப்தி தரவில்லை. அது மிகவும் சுயநலமானது, நமது கலாச்சாரத்திற்கே எதிரான ரோல் போல உள்ளது. இதில் நடிப்பது எனக்கு சரியென தோன்றவில்லை.”
“கடந்த சில மாதங்களாக இடைவிடாமல் நடித்தும், ஷூட்டிங் மிகவும் toxic ஆக மாறியது. வாழ்க்கை என்பது நேர்மை மற்றும் சுயமரியாதை உடன் இருக்க வேண்டும். அதை கடைபிடிக்க நான் முயற்சித்தாலும் முடியவில்லை. எனவே, நான் இந்த தொடரில் இருந்து விலகுகிறேன். நிச்சயம் மற்றொரு ப்ராஜெக்ட்டில் உங்களுடன் சந்திக்க காத்திருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.