You are currently viewing ஸ்வீடன் பள்ளியில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

ஸ்வீடன் பள்ளியில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

0
0

ஸ்வீடன்: ஐரோப்பாவின் அமைதியான நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில், பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் தாறுமாறாக தாக்குதல் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த பயங்கர சம்பவத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சியூட்டும் தாக்குதல்

இச்சம்பவம் மத்திய ஸ்வீடனில் உள்ள கல்வி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற பள்ளிக்குள் நடக்கும் தாக்குதல் ஸ்வீடன் வரலாற்றில் இதுவே முதல்முறையாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்வீடன் போலீஸ் துறை தலைவர் கூறியதாவது:

“இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்” என அவர் எச்சரித்துள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர் – தற்கொலை செய்தாரா?

திடீரென பள்ளிக்குள் நுழைந்த அந்த நபர், கண்ணில் பட்டவர்களை தாறுமாறாக சுட்டுத் தள்ளியதாக கூறப்படுகிறது. அவரே தனது உயிரையும் கோலியால் முடித்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக இதனை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.

தகவல் வெளிவராத மிஸ்டிரி!

இந்த தாக்குதலில்

  • உயிரிழந்தவர்கள் மாணவர்களா, ஆசிரியர்களா?
  • தாக்குதலின் காரணம் என்ன?
  • காயமடைந்தோர் நிலை எப்படி உள்ளது?

என்பதை பற்றி போலீசார் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

ஐரோப்பாவில் துப்பாக்கிச் சூடு – மிகப்பெரிய அதிர்ச்சி!

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகள் மிகவும் குறைவாக இருப்பதால் அங்கு அடிக்கடி இத்தகைய சம்பவங்கள் நடைபெறும். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், சில நேரங்களில் இப்படியான திடீர் தாக்குதல்கள் நடந்து விடுகின்றன.

போலீசார் தீவிர விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்வீடன் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் துறை தலைவர் கூறியதாவது:

“இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பயங்கரமான ஒன்று. இதை முன்னர் கண்டதில்லை. தாக்குதல் நடத்திய நபர் எந்தக் குற்றவாளிகளின் குழுவோடு தொடர்புடையவர் அல்ல என்பது தெரியவருகிறது. இது ஒரு தனிப்பட்ட தாக்குதல் என்று தோன்றுகிறது” என்றார்.

ஸ்வீடன் மக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உள்ளோரும் இந்த தாக்குதலால் பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் உள்ளனர்.

Leave a Reply