You are currently viewing திருப்பரங்குன்றம் விவகாரம்: ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி – நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் விவகாரம்: ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி – நயினார் நாகேந்திரன்

0
0

நெல்லை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நடுநிலையாக செயல்படவில்லை எனக் குற்றம் சாட்டிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், “இது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி” என கருத்து தெரிவித்துள்ளார்.


கைதானவர்களுக்கு ஆறுதல்!

நெல்லை மாவட்டத்தில், திருப்பரங்குன்றம் மலை மீது போராட்டத்திற்காக சென்றவர்களை காவல்துறை கைது செய்து மண்டபங்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை நேரில் சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல் கூறினார்.


“400 ஆண்டுகளாக கூட இது நடந்ததில்லை!”

செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“400 ஆண்டுகள் வெள்ளையர்கள் ஆட்சி செய்தபோதும் கூட இத்தகைய சம்பவம் நடந்ததில்லை!”
“ஆட்சியாளர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும், ஆனால் தற்போது தமிழக அரசு பெரும்பான்மை மக்களை இம்சை செய்யும் அரசாக செயல்படுகிறது” எனக் குற்றம்சாட்டினார்.


அரசியலாக மலை சொந்தமாக்கலாமா?

“சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் திருப்பரங்குன்றம் மலை எங்களுக்குச் சொந்தம் எனக் கூறி, மாமிசம் சாப்பிட்டு, ஆட்டை கழுத்தில் போட்டு பேட்டி கொடுத்தனர். இது ஒரு அரசியல்வாதி செய்யும் வேலைதானா?” என்று கேள்வி எழுப்பினார்.
“பெரும்பான்மை மக்களுக்கு எதிராக பேட்டி கொடுப்பது தவறு!” என அவர் கண்டனம் தெரிவித்தார்.


காவல் துறையின் நடவடிக்கை – எதிர்ப்பு!

இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை
பாஜக தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர்
திருப்பரங்குன்றம் செல்வதற்காக காவி வேட்டி கட்டி கோவிலுக்குச் சென்றவர்களே கைது செய்யப்பட்டனர்

“இந்த செயல், மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்திற்கான எண்ணத்தை உருவாக்கி வருகிறது!”


நீதிமன்ற தீர்ப்பு – தமிழக அரசின் நடவடிக்கை

“ஆங்கிலேயர் காலத்திலேயே நீதிமன்ற தீர்ப்பு மூலம் திருப்பரங்குன்றம் மலை முருகனுக்குச் சொந்தம் என உறுதி செய்யப்பட்டுள்ளது” என அவர் நினைவூட்டினார்.
“இதை மீண்டும் சர்ச்சையாக்கி, அரசே தன் காலையில் கட்டையை போட்டு, ஆட்சி மாற்றத்திற்கான நிலையை உருவாக்குகிறது” என்று அவர் தெரிவித்தார்.


“திருப்பணி யாராலும் தடுக்க முடியாது”

“அரசு திருப்பணி செய்வதை எங்களால் தடுக்க முடியாது. எந்த அரசு வந்தாலும் திருப்பணிகள் நடந்து கொண்டே இருக்கும். இதனை நாம் குறை சொல்லவில்லை” என அவர் குறிப்பிட்டார்.


எது அரசியல்? எது பக்தி?

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் கலப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்“மக்கள் மத்தியில்
 “மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது”
“மக்கள் விரைவில் மாற்றத்தை விரும்புவார்கள்” என அவர் எதிர்வு கூறினார்.

தமிழக அரசின் நடவடிக்கைகள் எதிர்கட்சிகளிடையே கடும் எதிர்ப்பை எழுப்பி உள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரம் மேலும் எந்தபடி செல்லும் என்பதை எதிர்பார்க்கலாம்!

Leave a Reply