You are currently viewing விஜய் மகன் சஞ்சய்யின் திறமைக்கு சந்தீப் கிஷன் பாராட்டு.

விஜய் மகன் சஞ்சய்யின் திறமைக்கு சந்தீப் கிஷன் பாராட்டு.

0
0

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ள நிலையில், அவரின் திரைமொழி, இயக்குநர் திறன் மற்றும் உறுதி குறித்து நடிகர் சந்தீப் கிஷன் வியப்புடன் பாராட்டியுள்ளார்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில், சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்க, தமன் இசையமைக்கிறார். சென்னை நகரில் நடந்த முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தனது புதிய தெலுங்கு படம் ‘மசாக்கா’ தொடர்பான விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்தீப் கிஷன், ஜேசன் சஞ்சய்யின் இயக்கத்திற்கான அழைப்பு குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

சந்தீப் கிஷன் கூறியதாவது:
*”ஒருநாள், விஜய் சாருடைய மகன் சஞ்சய் கதை சொல்ல விரும்புவதாக அழைப்பு வந்தது. ஆரம்பத்தில் அது என்னவென்று புரியாமல் அதிர்ச்சியாக இருந்தேன். பின்னர் ஹைதராபாத் வந்த சஞ்சய், இரண்டரை மணி நேரம் ஒரு சிறந்த கதையை விவரித்தார். அந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்ததால், உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்.

அவரது திரைமொழி, இயக்குநராகும் உறுதி, மற்றும் பயிற்சி—இவை அனைத்தும் மிகவே கவர்ந்தவை. முக்கியமாக, அவரின் அப்பாவின் பாரம்பரியத்தையும் அவரது ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற உறுதி, அவரிடம் அதிகமாக இருக்கிறது. எனவே, அவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். நாம் இணைந்து உருவாக்கப் போகும் படைப்பை நானே ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். மேலும், தமன் இதற்காக சில அற்புதமான பாடல்களை இப்போதே வழங்கியுள்ளார்.”*

இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் யார் நடிக்கிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Leave a Reply