You are currently viewing தங்கம் விலை தொடர்ந்து உயர்வு – வரும் நாட்களில் புதிய உச்சம் எட்டுமா?

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு – வரும் நாட்களில் புதிய உச்சம் எட்டுமா?

0
0

சென்னை: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வைக் காண்கிறது. தற்போது, 1 அவுன்ஸ் (சுமார் 4 பவுன்) தங்கத்தின் விலை ரூ.17,000 வரை உயரக்கூடும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். அதாவது, ஒரு பவுன் தங்கம் மட்டும் ரூ.4,000 வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

தங்கம் ஏன் அதிகரிக்கிறது?

பணவீக்கத்தின் தாக்கம் – உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, பணவீக்கம் எதிர்கொள்ளும் நிலையில், பல மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளன.
வர்த்தக போர் மற்றும் சந்தை நிலவரம் – அமெரிக்கா-சீனா வர்த்தக போரின் காரணமாக ஐரோப்பிய நாடுகள் தங்கத்தை அதிக அளவில் குவிக்கின்றன.
அமெரிக்காவின் புதிய வரி திட்டங்கள் – அமெரிக்கா, தங்க இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க வாய்ப்பிருப்பதால், மக்கள் முன்கூட்டியே தங்கத்தை வாங்கி குவிக்கின்றனர்.
வட்டி வீழ்ச்சி & டாலர் மதிப்பு குறைவு – அமெரிக்கா தனது வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்திருப்பது, டாலரின் மதிப்பைக் குறைத்து, தங்கத்தின் மதிப்பை உயர்த்தியுள்ளது.

தற்போதைய தங்கம் விலை நிலவரம் (சென்னை)

24 கேரட் (1 கிராம்) – ₹8,787
22 கேரட் (1 கிராம்) – ₹8,055
18 கேரட் (1 கிராம்) – ₹6,625

வர்த்தக போர், பணவீக்கம், மற்றும் மத்திய வங்கிகளின் முதலீடு ஆகியவை தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதால், வருங்காலத்தில் தங்கம் புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply