ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு – மீண்டும் காங்கிரஸ் போட்டி!

evks-ilangovan.jpg

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த ஆண்டின் இறுதியில் காலமானதை அடுத்து, அந்த தொகுதி காலியாகியுள்ளது. இதனால், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும், மேலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தப்படும்.2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில், திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். ஆனால், கடந்த டிசம்பர் மாதத்தில் உடல்நலக்குறைவால் அவர் காலமானது நினைவுகூரப்படத்தக்கது.

 

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். வேட்பாளர் யார் என்பது காங்கிரஸ் தலைமையின் ஆலோசனையின் பிறகே அறிவிக்கப்படும்.

கட்சியின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் தற்போதைய வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 2,26,433 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,09,636 ஆண்களும், 1,16,760 பெண்களும், 37 பிற வாக்காளர்களும் உள்ளனர்.

இந்த தேர்தல், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியின் வலிமையைக் காட்டும் முக்கியமானதொரு பரிட்சையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top