சென்னை விமான நிலையத்தில் குறைந்த விலையில் உணவு: ரூ.10-க்கு டீ, ரூ.20-க்கு சமோசா!

0546.jpg

சென்னை: பொதுவாக விமான நிலையங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால், பயணிகள் கூட தண்ணீர் வாங்க யோசிக்க வேண்டிய நிலை உருவாகிறது. இந்த சூழலில், சென்னை விமான நிலையத்தில் குறைந்த விலையில் உணவு வழங்க மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், ரூ.10-க்கு டீ, ரூ.20-க்கு காபி, சமோசா, இனிப்புகள், மற்றும் ரூ.10-க்கு தண்ணீர் பாட்டில் கிடைக்கும். இந்த முயற்சி பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

உதான் யாத்ரி கஃபே – விமான பயணிகளுக்கான குறைந்த விலை உணவகம்

விமான நிலையங்களில் உணவின் விலையைக் கட்டுப்படுத்த “உதான் யாத்ரி கஃபே” என்ற புதிய உணவகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், தரமான உணவுகளை மிகக் குறைந்த விலையில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உணவகத்தில் கிடைக்கும் பொருட்களின் விலை:

டீ – ₹10
காபி – ₹20
சமோசா – ₹20
இனிப்பு வகைகள் – ₹20
தண்ணீர் பாட்டில் – ₹10

விரிவாக்கம் – நாடு முழுவதும் பயன்பாடு

இந்த உதான் யாத்ரி கஃபே திட்டம் முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு கிடைத்த மிகுந்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது சென்னை விமான நிலையத்திலும் இந்த உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் டெல்லி உள்ளிட்ட மற்ற விமான நிலையங்களிலும் இதே திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தனியார் விமான நிலையங்களிலும் விலை குறைக்க கோரிக்கை

தற்போது இந்தியாவின் பெரும்பாலான விமான நிலையங்கள் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே, அங்கும் உணவுப் பொருட்களின் விலையை குறைத்து, பயணிகள் அனைவரும் எளிதாக உணவு அணுகலாம் என்ற கோரிக்கை பலத்தாக்கி வருகிறது.
இந்த புதிய முயற்சி விமான பயணிகளுக்கு பெரிய நிவாரணமாக அமையும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *