You are currently viewing சென்னையில் உணவு Poisoning! ஷவர்மா, பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு!

சென்னையில் உணவு Poisoning! ஷவர்மா, பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு!

0
0

சவர்மா சாப்பிட்ட 18 பேருக்கு அடுத்தடுத்து உடல் நிலை பாதிப்பு.! பிரபல ஓட்டலுக்கு சீல்:

சென்னையில் பிரபலமான உணவகம் ஒன்றில் சவர்மா உண்ட இருபதுக்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உணவின் தரம் குறித்து சந்தேகம் எழுப்பிய பாதிக்கப்பட்டவர்கள், உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

நவீன உணவு கலாச்சாரத்தில் புதுப்புது பெயர்களில் உணவுகள் மக்களை கவர்ந்து வரும் நிலையில், தெருவோரங்களில் கிடைக்கும் பல்வேறு உணவு வகைகளில் சவர்மா தொடர்ந்து ஒரு சிக்கலான உணவாக இருந்து வருகிறது. அவ்வப்போது சென்னையில் சவர்மா சாப்பிட்டவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது கவலை அளிக்கிறது.

சென்னையில் பிரபல பிரியாணி கடையில் உணவு உண்ட பலருக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணி அண்ணா சாலையில் இயங்கி வரும் பிலால் பிரியாணியில் கடந்த 30-ஆம் தேதி உணவு அருந்தியவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிரபல பிலால் உணவகத்தில் கடந்த 30-ஆம் தேதி சவர்மா சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அளித்த தொடர் புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary :Chennai is facing concerns over food safety as multiple incidents of food poisoning have emerged. Over twenty people fell ill after eating shawarma at one restaurant, while a separate incident at Bilal Biryani also led to several hospitalizations due to vomiting and dizziness.

Leave a Reply