சென்னை: “மொழியை வைத்து பிளவு ஏற்படுத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முயல்கிறார்” என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “நாங்கள் எந்த மொழிக்கும் எதிர்ப்பாளர்கள் அல்ல. ஆனால், மொழித் திணிப்பையும், மொழியின் ஆதிக்கத்தையுமே எதிர்க்கிறோம்.”
இது வாக்கு வங்கி அரசியலுக்கான பேச்சல்ல. இது கண்ணியத்தையும் நீதியையும் நிலைநாட்டும் போராட்டம். வெறுப்புப் பேச்சு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.
இந்தித் திணிப்பையும், பேரினவாதத்தையும் நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். இது வாக்கு வங்கிக்கான கலவர அரசியல் அல்ல. கண்ணியத்தையும் நீதியையும் நிலைநாட்டும் போராட்டம்.
தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் குரல் நாடெங்கும் எதிரொலிப்பதால், பாஜக கலக்கம் அடைந்துள்ளது. பாஜகவினரின் பேட்டிகள் மூலம் இது தெளிவாகத் தெரிகிறது” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.
Summary ; In response to Uttar Pradesh CM Yogi Adityanath’s statement accusing him of divisive language politics, Tamil Nadu CM M.K. Stalin firmly stated that his party opposes only language imposition and dominance. Stalin asserted that their struggle is for dignity and justice, not driven by electoral gains, and pointed towards the BJP’s alleged anxiety over Tamil Nadu’s vocal stance on constituency delimitation as evidenced by their leaders’ statements.