You are currently viewing Extramarital Affair -திருமண மீறிய உறவு குற்றமல்ல!

Extramarital Affair -திருமண மீறிய உறவு குற்றமல்ல!

0
0

ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல – உயர்நீதிமன்றம் – Extramarital Affair

திருமணமான ஆணும் பெண்ணும், தாங்கள் செய்துகொண்ட திருமண பந்தத்திற்கு அப்பால், பரஸ்பர விருப்பத்துடன் (Extramarital Affair) உடலுறவு கொள்வது குற்றமாகாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சமீபத்தில், திருமணமான ஒரு பெண், திருமணமான ஒரு ஆணுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பிபாஸ் ரஞ்சன்  தலைமையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி கருத்து தெரிவிக்கையில், “ஆரம்பத்திலிருந்தே இரு திருமணமான ஆணும் பெண்ணும் சம்மதத்துடன் ஈடுபடும் உடல் ரீதியான உறவு, வாக்குறுதி கொடுத்து ஒருவரை ஏமாற்றுவதற்கு ஒப்பானதாகக் கருதப்படாது.

இத்தகைய உறவு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட பரஸ்பர ஈர்ப்பு காரணமாக, அவர்களின் ஒப்புதலின் பேரிலேயே நிகழ்ந்தது என்று கருதப்படும்” என்று குறிப்பிட்டார்.

ஆகவே, குற்றம் சுமத்தப்பட்ட அந்த திருமணமான ஆணுக்கு எதிராக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

சட்டத்தின் புதிய பார்வை :

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டத்தின் 497வது பிரிவை ரத்து செய்ததன் மூலம், திருமண மீறிய உறவு குற்றமல்ல என்று தீர்ப்பளித்திருந்தாலும்,

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இந்த புதிய தீர்ப்பு, பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் உருவாகும் உறவுகளை குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது என்பதை மேலும் வலுவாக எடுத்துரைக்கிறது.

Summary:

The Kolkata High Court has ruled that consensual physical relationships between married men and women outside their marriage do not constitute a crime.

This verdict came during the hearing of a case involving a married man accused of misleading a married woman.

The court stated that such relationships, based on mutual attraction and consent, cannot be equated to cheating by promise, effectively quashing the proceedings against the accused man.

Leave a Reply