You are currently viewing Rice Cancer Risk | நெல் விஷம் – புற்றுநோய் அபாயம்?

Rice Cancer Risk | நெல் விஷம் – புற்றுநோய் அபாயம்?

0
0

2050 அலர்ட்! அரிசி உண்ணும் தேசங்களுக்கு புற்றுநோய் எச்சரிக்கை! – Rice Cancer Risk

Rice Cancer Risk – அரிசியால் உண்டாகும் புற்றுநோய்? 2050-க்குள் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிப்பு? – ஆய்வில் அதிர்ச்சி

காலநிலை மாற்றத்தால் அரிசியில் ஆர்சனிக் அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

2050-க்குள் ஆசியாவில் புற்றுநோய் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் வரலாம் என்று லான்செட் ஆய்வு எச்சரிக்கிறது.

வெப்பநிலை உயர்வு மற்றும் கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பு மண்ணை ஆர்சனிக் உருவாக சாதகமாக்கும் என்று கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆர்சனிக் எளிதில் அரிசியில் கலக்கிறது. மாசுபட்ட மண், பாசன நீர் மற்றும் சமையல் நீர் மூலம் அரிசியில் ஆர்சனிக் அளவு அதிகரிக்கிறது.

இதன் அதிகப்படியான நுகர்வு நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் தோல் புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அரிசி முக்கிய உணவாக இருப்பதால், இது ஒரு பெரிய சுகாதார அபாயமாக உள்ளது என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

இந்தியா, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இதில் அடங்கும்.

இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் 10 ஆண்டுகளாக 28 அரிசி வகைகளை வயலில் வைத்து, அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் கார்பன் டை ஆக்சைடின் தாக்கத்தை அளவிட்டனர்.

இந்த மாதிரிகளைப் பயன்படுத்தி, பங்களாதேஷ், சீனா, இந்தியா உட்பட ஏழு ஆசிய நாடுகளின் அரிசியில் உள்ள கனிம ஆர்சனிக் அளவுகள் மற்றும் அதனால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் கணிக்கப்பட்டன.

ஆய்வின் முடிவில், வெப்பநிலை மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவை இணைந்து அரிசியில் ஆர்சனிக் அளவை அதிகரிப்பதுடன், அரிசி சாப்பிடுபவர்களுக்கு உணவு மூலம் ஆர்சனிக் உடலில் சேர்வதை அதிகரித்து, 2050-ல் ஆசிய நாடுகளில் கோடிக்கணக்கான மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கண்டறியப்பட்டது.

குறிப்பாக, இந்த ஏழு நாடுகளில், 2050-ல் அரிசியில் உள்ள ஆர்சனிக் காரணமாக அதிகபட்சமாக சீனாவில் 1.34 கோடி புற்றுநோய் பாதிப்புகள் வரை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

Summary : Climate change, specifically rising temperatures and CO2 levels, is predicted to significantly increase arsenic levels in rice in Asia by 2050. This contamination, highlighted in a Lancet study, poses a major health risk, potentially leading to millions of cancer cases in countries like India and China where rice is a staple food.

Leave a Reply