வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா..?” – அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் –
TN Summer Vacation Extension
TN Summer Vacation Extension – நாடு முழுவதும் இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது .
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கும், மே தின நினைவுச் சின்னத்திற்கும் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும், ஊடகத்துறையைச் சார்ந்தவர்களுக்கும், எனது மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பள்ளிகள் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், திருச்சி மாவட்டத்தில் தற்போது 104 டிகிரி வெப்பம் நிலவுகிறது. எனவே, பள்ளிகளை ஜூன் மாதம் 2-ம் தேதி திறக்க திட்டமிட்டுள்ளோம்.
அன்றைய தினத்தின் வெப்பநிலையைப் பொறுத்து, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அவர்கள் இறுதி முடிவு எடுப்பார்.
பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதற்காகவே கட்டண நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு பரிந்துரைக்கும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Summary:
This article reports on Tamil Nadu Education Minister Anbil Mahesh’s statement regarding the potential postponement of school reopening due to high temperatures, particularly the 104 degrees Celsius recorded in Trichy.
He mentions the tentative reopening date of June 2nd but emphasizes that the final decision rests with the Chief Minister based on the weather conditions at that time.
The minister also reiterated the strict measures against schools charging excessive fees.