You are currently viewing First Indian in ISS | இந்தியாவின் விண்வெளி நாயகன்!

First Indian in ISS | இந்தியாவின் விண்வெளி நாயகன்!

0
0

இந்தியாவின் விண்வெளி நாயகன்! – First Indian in ISS

First Indian in ISS : யார் இந்த சுபான்ஷு சுக்லா? சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்தியர் – பயண நாட்கள், விவரம்

வானில் வரலாறு படைக்கிறார் சுபான்ஷு சுக்லா: சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணிக்கும் முதல் இந்தியர்!

இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் தருணம் நெருங்கிவிட்டது! இந்திய விமானப்படையின் வீரர் சுபான்ஷு சுக்லா, இன்னும் சில வாரங்களில் விண்ணில் புதிய வரலாறு படைக்கவுள்ளார்.

மே 29 ஆம் தேதி தொடங்கியா ஆக்சியம் மிஷன் 4 (Ax-4 Mission) பயணத்தின் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பொன்னான பெயரை அவர் பெறுகிறார்.

அதுமட்டுமின்றி, இந்திய விமானப்படையிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற சிறப்பையும் அவர் தட்டிச் செல்கிறார்.

இதற்கு முன்னர், இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் சர்மா அவர்கள் 1984 ஆம் ஆண்டு சோவியத் சோயுஸ் T-11 விண்கலம் மூலம் விண்ணில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயணம் :

39 வயதான சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆக்சியம் ஸ்பேஸ் மற்றும் நாசாவுடன் இணைந்து மேற்கொள்ளும் இந்த Ax-4 Mission திட்டத்தின் மூலம் தனது விண்வெளி கனவை நனவாக்கிக் கொள்கிறார்.

மே 29 ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் சுபான்ஷுவும், அவருடன் மூன்று சர்வதேச விண்வெளி வீரர்களும் டிராகன் காப்ஸ்யூலில் விண்ணிற்குப் பயணித்தார்.

பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று, அங்கு இந்த குழு பல்வேறு முக்கியமான அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

யார் இந்த சுபான்ஷு சுக்லா? ஒரு வீரனின் கதை :

ராகேஷ் சர்மா விண்ணுக்குச் சென்று திரும்பிய அடுத்த ஆண்டு, அதாவது 1985 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் திரிவேணி நகரில் பிறந்தவர் தான் இந்த சாதனை நாயகன் சுபான்ஷு சுக்லா.

இந்தியாவில் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் ஒரு பேச்சாகக் கூட இல்லாத காலகட்டத்தில், சிறு வயதில் அவர் கண்ட விமான சாகச நிகழ்ச்சிதான் அவருக்குள் வானில் பறக்க வேண்டும் என்ற தீராத வேட்கையை விதைத்தது.

யாரும் எதிர்பாராத விதமாக, கடைசி நேரத்தில் விலகிய தனது நண்பரின் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, தனது பெற்றோருக்குக் கூடத் தெரிவிக்காமல் தனது 16 வயதில் தேசிய பாதுகாப்பு அகாடெமிக்கு விண்ணப்பித்தார்.

அதே துணிச்சலான பாணியை பின்பற்றித்தான், 2019 ஆம் ஆண்டு இந்தியாவே எதிர்பார்த்திருக்கும் ககன்யான் திட்டத்திற்கும் தனது பெற்றோரிடம் கூறாமல் விண்ணப்பித்தார் என்பது வியப்பளிக்கும் தகவல்.

விமானப்படையில் “குஞ்சன்”: ஒரு போர் வீரனின் பயணம் :

சுபான்ஷு சுக்லா லக்னோவின் சிட்டி மான்டெசோரி பள்ளியில் படித்தவர். 2006-ல் விமானப்படையில் இணைந்து, போர் விமானக் குழுவின் தலைவராகவும், சோதனை விமானியாகவும் திறம்பட செயல்பட்டார்.

Su-30 MKI உட்பட பல விமானங்களில் 2000 மணி நேரத்திற்கும் மேல் பறந்த அனுபவம் உள்ளவர்.

அறிவியல் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள இவரை குடும்பத்தினர் “குஞ்சன்” என்று அழைக்கின்றனர். இவரது மனைவி பல் மருத்துவர், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

ககன்யான் திட்டத்தில் ஒரு முக்கிய வீரர் : First Indian in ISS

இந்தியாவின் முக்கியமான ககன்யான் திட்டத்திற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க இஸ்ரோ விமானப்படையை அணுகியபோது, சுபான்ஷு ஆர்வத்துடன் விண்ணப்பித்துத் தேர்வானார்.

கடுமையான உடல், மனநலப் பரிசோதனைகளில் வென்று, தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு வீரர்களில் ஒருவரானார்.

பின்னர், ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் சர்வதேச விண்வெளி நிலையப் பயணக் குழுவிலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் மூலம், சர்வதேச விண்வெளிப் பயணக் குழுவில் இடம்பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

அவருடன் பிரசாந்த் நாயர், அர்ஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகியோரும் ககன்யான் குழுவில் உள்ளனர்.

சுபான்ஷுவின் சர்வதேச குழு :

இந்த வரலாற்றுப் பயணத்தில் சுபான்ஷு “SHUX” என்று அழைக்கப்படுகிறார்.

பெக்கி விட்சன் தலைமையிலான குழுவில் ஸ்லாவோஸின் உஜன்ஸ்கி மற்றும் டிபோர் காப்பு ஆகியோரும் உள்ளனர்.

Ax-4 பயணத்திற்காக சுபான்ஷு நாசா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஆக்சியம் ஆய்வகங்களில் விண்வெளிப் பயிற்சி பெற்றுள்ளார்.

இரண்டு வாரங்கள் விண்வெளியில் தங்கி அறிவியல், புவி கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

இந்தியாவுக்கு இது எப்படி உதவும்?

விண்வெளிப் பயணப் பயிற்சியில் இருக்கும் சுபான்ஷு, ஆக்சியம் பயணத்தின் அனுபவம் ககன்யானுக்கு உதவும் என்கிறார்.

தான் தனியாகச் சென்றாலும், 140 கோடி இந்தியர்களின் கனவு தன்னுடன் வருவதாக நம்புகிறார்.

இந்திய உணவு எடுத்துச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரப் பயணத்துக்குப் பின் ககன்யான் திட்டத்தில் இணைவார். அடுத்த ஆண்டு இந்தியா மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

Summary :

Shubhanshu Shukla is set to become the first Indian to travel to the International Space Station (ISS)!

Learn about his journey, the Ax-4 mission, and his significance for India’s space program.

 

Leave a Reply