தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேர மழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு

0065.jpg

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மழை வாய்ப்பு நிலவுவதாகவும், குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், சென்னை நகரில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இன்று (அக்டோபர் 18) காலை 10 மணி வரை அடுத்த 3 மணி நேரத்திற்கு சிறப்பு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதோடு, புதுச்சேரியிலும் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

Summary :
IMD warns of rain in 9 Tamil Nadu districts and Puducherry for the next 3 hours; Chennai may see moderate showers with thunder.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *