17 வயதில் நான் எடுத்த தவறான முடிவு – அமலாபால் வேதனை.
‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை அமலாபால், விஜய், விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
சமீபத்திய பேட்டியில் அமலாபால், ‘சிந்து சமவெளி’ வெளியானபோது எழுந்த விமர்சனங்கள் தன்னை பயமுறுத்தியதாகவும், குறிப்பாக தனது கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து அவரது தந்தை வருத்தப்பட்டதாகவும் கூறினார்.
சிந்து சமவெளி’ வெளியான பிறகுதான் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கக் கூடாது என்பதை உணர்ந்தேன், அப்போது எனக்கு வெறும் 17 வயதுதான் என்பதால் இயக்குனரின் பேச்சை நம்பி நடித்தது தவறு என்று அமலாபால் கூறுகிறார்.
அந்தப் படத்தின் காரணத்தால் தான் அடைந்த வேதனை மட்டுமின்றி, அதன் பிறகு நடித்த ‘மைனா’ பட விளம்பரத்திற்கு கூட தன்னை அழைக்கவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.
சினிமா வியாபார நோக்கம் கொண்டது என்பதை உணர்ந்த அவர், நடிகைகள் எத்தகைய அடிகளையும் தாங்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டதாகக் கூறுகிறார்.
Summary: Actress Amala Paul has opened up about the distress caused by the criticism surrounding her early film “Sindhu Samaveli,” which was released when she was 17. She expressed regret for trusting the director at such a young age and detailed the emotional turmoil and professional setbacks she faced, including being excluded from the promotions of her later successful film “Mynaa.”