You are currently viewing சீனா இலவச வீடுகளை வழங்கும் திட்டம் – ஏன் அதிருப்தியுடன் மறுக்கும் இலங்கை மீனவர்கள்?

சீனா இலவச வீடுகளை வழங்கும் திட்டம் – ஏன் அதிருப்தியுடன் மறுக்கும் இலங்கை மீனவர்கள்?

0
0

யாழ்ப்பாணம்: இலங்கையில் வாழும் தமிழர் மீனவ சமூகத்திற்காக சீனா இலவசமாக தற்காலிக வீடுகளை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால், பலர் இந்த வீடுகளை பெற மறுத்து வருவது பெரும் விவாதமாக மாறியுள்ளது.

2009 முள்ளிவாய்க்கால் போரின் பாதிப்பு.

2009ஆம் ஆண்டு நடந்த முள்ளிவாய்க்கால் போர், இலங்கையில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியது. மகிந்த ராசபக்ச அரசின் ராணுவம், போரின் இறுதிக்கட்டத்தில் விசாரணை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழர்களை அழைத்துச் சென்றது. இன்றுவரை அவர்களின் நிலைமையென்ன என்பதே புரியாத புதிராகவே உள்ளது.

 போருக்குப் பிறகு, நிறைய தமிழர்கள் தங்களின் உறவுகளை இழந்து, சிதறி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
15 ஆண்டுகளாக, இந்த தமிழர்கள் நிரந்தர வீடுகள் இல்லாமல் துயரமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
 தற்போது, தமிழர்களுக்காக சீனா தற்காலிக வீடுகளை வழங்கி வருகிறது.

சீனா வழங்கும் வீடுகள் – சிறப்புகள் & குறைகள்

இவை சிமெண்ட் வீடுகள் அல்ல; கண்டெய்னர் வீடுகள்
சுமார் 15 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்
 ஒரு குடும்பத்திற்கேற்றபடி, சமையலறை, வரவேற்பறை, இரண்டு ஜன்னல்கள், மின்சாதன வசதிகள் உள்ளன
புயல், மழை, கடலோர சூழலுக்கேற்ப தயாரிக்கப்பட்ட வீடுகள்
முழு வீடு சீனாவில் தயாராகி, இலங்கையில் இணைக்கப்படுகிறது

மீனவர்கள் ஏன் மறுப்பார்கள்?

சில மீனவர்கள் இந்த வீடுகளை பெற மறுக்கிறார்கள். இதற்குக் காரணம்:

இவை நிரந்தர வீடுகளாக அமைந்துவிடுமோ என்ற அச்சம்!
இந்த வீடுகளை ஏற்றுக்கொண்டால், இலங்கை அரசு கட்டித் தர வேண்டிய சிமெண்ட் வீடுகளை மறுக்கலாம்
இவற்றை இடம் மாற்றுவது சாத்தியமானாலும், சொந்த நிலத்தின் உரிமை தொடர்பான உறுதிப்படுத்தல் இல்லாமல் போகலாம்15 ஆண்டுகளாக கடும் துயரங்களை அனுபவித்து வரும் மீனவர்கள், இவற்றை சிலர் வரவேற்றாலும், பலர் நிரந்தரமாக சிமெண்ட் வீடுகளை பெற்றே தீர வேண்டும் என்ற மனப்பான்மையுடன் இருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு – நிரந்தர தீர்வு தேவை!

இலங்கை அரசிடம் தொடர்ந்து தமிழ் மக்கள் கோருவது:
நிரந்தர வீடுகள் & உரிமை உறுதி.
முள்ளிவாய்க்கால் போரில் காணாமல் போன உறவுகளை பற்றிய விசாரணை
தமிழர்களுக்கு சமத்துவமான வாழ்வுசீனாவின் இலவச வீடுகள் ஒரு தீர்வாக இருந்தாலும், தமிழர்களின் நீண்ட கால உறுதி முறையிலான வீட்டு வசதி தீர்வு இன்னும் பலருக்குத் தேவை என்பதே உண்மை.

Leave a Reply