கடலூர் அருகே அரசு-தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 30 பயணிகள் காயம்
கடலூர் அருகே ஆலப்பாக்கம் என்னுமிடத்தில் அரசுப் பேருந்து ஒன்றும், தனியார் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்டதில் முப்பது பயணிகள் காயமடைந்தனர்.
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்று சென்னையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு விழுப்புரம் – நாகை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆலப்பாக்கம் அருகே வந்தபோது, கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று அரசுப் பேருந்தின் மீது மோதியது.
தனியார் பேருந்து ஒன்று இடதுபுறம் திரும்புகையில் அரசுப் பேருந்து மீது மோதியதால் விபத்து நேரிட்டது. இதில் அரசுப் பேருந்து சாலையிலிருந்து விலகி வயலுக்குள் சென்றது.
இரு பேருந்துகளிலும் இருந்த 30 பயணிகள் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Summary :
Thirty passengers were injured in a collision between a government bus and a private bus near Alapakkam, Cuddalore. The private bus, turning left, hit the state-run bus, causing it to veer into a field. Injured passengers from both vehicles have been hospitalized, and police are investigating the incident.