திண்டுக்கல் மட்டன் பிரியாணி என்றாலே அதன் அமோகமான நறுமணம் மற்றும் தனித்துவமான சுவை நாக்கில் நின்றுவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த பாரம்பரிய பிரியாணியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சீரகசம்பா அரிசி – 1 kg
மட்டன் – 1¼ kg
பெரிய வெங்காயம் – 2
சின்ன வெங்காயம் – 200g
தக்காளி – 1
பூண்டு – 150g
இஞ்சி – 150g
மிளகாய் தூள் – 10g
பச்சை மிளகாய் – 4
புதினா – 1 கைப்பிடி
கொத்தமல்லி – 1 கைப்பிடி
பட்டை – 2 துண்டு
ஏலக்காய் – 7
கிராம்பு – 8
அன்னாசி பூ – 2
எலுமிச்சை – ½
தயிர் – 100ml
நெய் – 200ml
எண்ணெய் – 100ml
எளிய செய்முறை:
மசாலா தயாரிப்பு
ஒரு பாத்திரத்தில் நெய் & எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும்.
மிளகாய் தூள் சேர்த்து கிளறி, பின்னர் பச்சை மிளகாய் & பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
புதினா & கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து சேர்த்து மீண்டும் வதக்கவும்.
இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி, தக்காளி & தயிர் சேர்த்து கிளறி விடவும்.
மசாலா பேஸ்ட் அரைக்கவும்
மிக்ஸியில்:
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
அன்னாசி பூ
இவற்றை தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் மட்டன் சேர்த்து அரைத்த மசாலாவை போட்டு நன்கு கிளறவும்.
மட்டனை வேக வைக்கவும்
மட்டன் நன்கு வதங்கி வந்ததும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 20 நிமிடங்கள் நன்கு வேகவைக்கவும்.
அரிசி சேர்த்து பிரியாணி தயாரிக்கவும்
சீரகசம்பா அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
1 கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் அளந்து வைத்துக்கொள்ளவும்.
மட்டன் வெந்த பிறகு, அளவான தண்ணீர் & எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க விடவும்.
பின் அரிசி சேர்த்து தீயை அதிகமாக வைத்து வேகவைக்கவும்.
அரிசி முக்கால் பதம் வெந்ததும், மிதமான தீயில் 20 நிமிடம் தம் வைத்து கிளறினால்…
அருமையான திண்டுக்கல் மட்டன் பிரியாணி ரெடி.
சிறந்த பரிமாறும் யோசனைகள்:
முட்டை, வெங்காய ராய்தா & வெங்காய சாதம் – சூப்பர் காம்பினேஷன்.
உருளைக்கிழங்கு வறுவல் அல்லது மட்டன் கிரேவி – பரிமாறலாம்.
தயிர் சாதத்துடன் முடித்தால், முழுமையான பாரம்பரிய உணவு.
இந்த முறையில் செய்து பாருங்கள், திண்டுக்கல் பிரியாணியின் அதே சுவை கிடைக்கும்.