You are currently viewing மாதவிடாய் காலத்தில் தலைச்சுற்றல் ஏற்படுகிறதா? இதோ காரணமும், தீர்வும்!

மாதவிடாய் காலத்தில் தலைச்சுற்றல் ஏற்படுகிறதா? இதோ காரணமும், தீர்வும்!

0
0

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் ஒரு இயற்கையான உடல் செயல்முறை. ஆனால் இந்த நேரத்தில் வயிற்று வலி, மனநிலை மாற்றம், அதிக இரத்தப்போக்கு போன்ற பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
அதிக இரத்தப்போக்கு காரணமாக, சில பெண்களுக்கு தலைச்சுற்றல், பலவீனம், குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். சிலர் படுக்கையில் இருந்து எழுவதற்கே சிரமப்படும் அளவுக்கு பாதிக்கப்படுவார்கள்.
இது ஏன் ஏற்படுகிறது? இதை எப்படி தடுக்கலாம்? என்பதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம்.

மாதவிடாய் காலத்தில் தலைச்சுற்றல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்

இரத்த இழப்பு – அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு உடலில் ஆக்ஸிஜன் விநியோகத்தை குறைத்து, தலைச்சுற்றலுக்கு காரணமாகிறது.
இரத்தசோகை (Anemia) – ஏற்கனவே இரத்தசோகை (Low Hemoglobin) உள்ள பெண்களுக்கு தலைச்சுற்றல் கூடுதலாக ஏற்படும்.
ஹார்மோன் மாற்றங்கள் – மாதவிடாய் காலங்களில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அளவு மாறுவதால், இரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டு, தலைச்சுற்றல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தண்ணீர் குறைவு (Dehydration) – அதிக இரத்தப்போக்கால் உடலில் நீர் இழப்பு அதிகமாகி, பலவீனம் ஏற்படும்.
உணவுக் குறைவு – சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் உணவு மற்றும் நீர் குடிப்பதை தவிர்ப்பதால், Low BP மற்றும் இரத்த ஓட்ட குறைவு ஏற்பட்டு, தலைச்சுற்றல் ஏற்படுகிறது.

இதை எவ்வாறு தடுப்பது?

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும்
மாதுளை, பீட்ரூட், ஆப்பிள், வெல்லம், கீரை வகைகள், உலர்ந்த திராட்சை போன்றவை உடலில் இரத்தநிலை சீராக்கும்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்
தினமும் 8–10 கப் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தேங்காய் தண்ணீர், மூலிகை தேநீர் ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம்.
காஃபின் உட்கொள்வதை குறைக்கவும்
அதிக அளவில் கஃபின் (Coffee, Tea, Soft Drinks) உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது, இது நீரிழப்பை ஏற்படுத்தும்.
சரியான நேரத்தில் உணவு மற்றும் ஓய்வு
உணவு தவிர்ப்பதை விட, சிறு சிறு இடைவெளிகளில் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடலாம்.
போதுமான ஓய்வு மற்றும் தூக்கம் உறுதி செய்ய வேண்டும்.

தலைச்சுற்றல் ஏற்பட்டால் உடனடி நிவாரணம் பெறுவது எப்படி?

ஒரு இடத்தில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுக்கவும்.
குளிர்ந்த தண்ணீர் அல்லது தேங்காய் தண்ணீர் அருந்தவும்.
சிறிது பழச்சாறு குடித்தால் உடல் புத்துணர்ச்சி பெறும்.

தோன்றும் சிறு அறிகுறிகளையும் அலட்சியம் செய்யாதீர்கள்

மாதவிடாய் காலத்தில் தொடர்ந்து அதிக இரத்தப்போக்கு, தாகம், தலைச்சுற்றல், பலவீனம் போன்றவை இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
இயற்கையான முறையில் உடலை பாதுகாத்து, ஆரோக்கியமான மாதவிடாய் நாள்களை கடப்பது மிகவும் முக்கியம்.

Leave a Reply