பீகார் மாநிலத்தில் அமைந்திருக்கும் கோபால் கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ஆதர்ஷ் ராய். இவர் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூருக்கு ஒரு குடும்ப விழாவில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய காரில் சென்றிருந்தார்.
அந்த விழாவில் வந்திருந்தவர்களுக்கு மது விருந்து பரிமாறப்பட்டது. அப்போது ஆதர்ஷ் ராய் அதிகப்படியான மதுவை அருந்திவிட்டார். பின்னர், அவர் தனது வீட்டிற்குத் திரும்புவதற்காக காரில் பயணத்தைத் தொடங்கினார்.
ஆனால், மதுவின் போதை தலைக்கேறியிருந்ததால், அவருக்குத் தன் வீடு செல்லும் வழி எதுவென்று சரியாகத் தெரியவில்லை. இதன் காரணமாக, அவர் தன்னுடைய கைபேசியில் இருந்த கூகிள் மேப்ஸ் செயலியைத் திறந்து, அதில் தன்னுடைய சொந்த ஊரின் பெயரைத் தேடினார்.
கூகிள் மேப் வழிகாட்டுதலால் ரயில் தண்டவாளத்தில் கார் சிக்கியது. வேகமாக வந்த ரயில் அவசர பிரேக் போட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
ரயில்வே போலீசார் வந்து காரை அகற்றினர். இதனால் ரயில் 57 நிமிடம் தாமதமானது. தவறான முகவரியால் இந்த தவறு நடந்தது. கார் பறிமுதல் செய்யப்பட்டது.
Summary:
In Bihar, India, a man under the influence of alcohol was driving back home from a family event in Uttar Pradesh. Relying on Google Maps, he mistakenly drove his car onto a railway track. An approaching train had to apply emergency brakes to avoid a collision. Railway police removed the car, causing a 57-minute delay. The car was confiscated due to the driver’s error and incorrect address input in the navigation app.