You are currently viewing Mahesh Babu ED Summons |மகேஷ் பாபுவுக்கு ED சம்மன்!

Mahesh Babu ED Summons |மகேஷ் பாபுவுக்கு ED சம்மன்!

0
0

பண மோசடி வழக்கில் சிக்கிய மகேஷ் பாபு : அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் பரபரப்பு – Mahesh Babu ED Summons

Mahesh Babu ED Summons – பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத் துறை (ED) பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் தொடர்பான வழக்கில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நிறுவனங்களின் விளம்பரத் தூதராக இருக்கும் மகேஷ் பாபு, வரும் 27ஆம் தேதி விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று ED தனது நோட்டீஸில் தெரிவித்துள்ளது.

மோசடியில் ஈடுபட்டாரா Mahesh Babu?

நடிகர் மகேஷ் பாபு, சூர்யா டெவலப்பர்ஸிடமிருந்து ₹5.9 கோடி பெற்ற விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணை நடத்துகிறது.

அவர் இந்நிறுவனத்தை விளம்பரப்படுத்தியதற்காக அதிக ஊதியம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

சாய் சூர்யா டெவலப்பர்ஸும் சுரானா குழுமமும் ஒரே நிலத்தை வெவ்வேறு நபர்களுக்கு விற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரில் மகேஷ் பாபுவுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

1000 கோடியில் உருவாகும் Mahesh Babu படம்

ரியல் எஸ்டேட் மோசடி விவகாரத்தில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் சூர்யா டெவலப்பர்ஸிடமிருந்து பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ராஜமௌலி இயக்கும் SSMB 29 படத்தின் படப்பிடிப்பிலும் இது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏற்கனவே ஒரு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஆப்பிரிக்க காடுகளை பின்னணியாகக் கொண்ட சாகச கதையான இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Summary:

Telugu superstar Mahesh Babu has been summoned by the Enforcement Directorate (ED) to appear for questioning on April 27th in connection with a money laundering case involving Sai Surya Developers and the Surana Group.

The ED is investigating a transaction where Mahesh Babu allegedly received ₹5.9 crore from Surya Developers, for whom he served as a brand ambassador.

The case revolves around allegations that these companies defrauded buyers by selling the same land to multiple individuals.

This development has created significant buzz in Tollywood, especially considering Mahesh Babu’s involvement in the highly anticipated ₹1000 crore film SSMB 29 directed by Rajamouli.

Leave a Reply