3 மாநில எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டமா? ரோந்து பணி தீவிரம்
2017ல் கேரள வனத்தில் தமிழக மாவோயிஸ்ட்கள் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டனர்.அவர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்தும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் தப்பினர்.பின்னர் அவர்கள் சென்னையில் ஒருவரும், ஓசூரில் ஒருவருமாக கைது செய்யப்பட்டனர்.
இது 2017ல் நடந்த மாவோயிஸ்ட்கள் தொடர்பான ஒரு கைது நடவடிக்கை.தமிழக கியூ பிரிவு போலீசார் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தற்போதைய நிலவரப்படி,
தமிழகத்தின் சென்னை, கோவை, தேனி, ராமநாதபுரம், சேலம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும்,
கேரளத்தின் வயநாடு, மலப்புரம், பாலக்காடு பகுதிகளிலும்,
கர்நாடகாவின் உடுப்பி பிராந்தியத்திலும் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைகள் கூடும் நீலகிரி முச்சந்திப்பு வனப்பகுதியில், இந்த மூன்று மாநிலங்களின் சிறப்பு காவல் படையினரும் மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்படும் இந்த மூன்று மாநில கூட்டு ரோந்து பணியின்போது, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் இரண்டு மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது நடைபெற்று வரும் இந்த ரோந்து கண்காணிப்பில் இதுவரை எந்த மாவோயிஸ்ட் நடமாட்டமும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், இப்பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Summary ; The tri-state border region of Tamil Nadu, Kerala, and Karnataka is under increased surveillance due to intelligence suggesting potential Maoist activity across several districts within these states. Joint patrols by special forces are ongoing in the Nilgiri tri-junction area. While the current patrols haven’t detected any Maoist presence, this annual effort since 2014 has led to past arrests, highlighting the continued vigilance in the region.