மோடியின் இலவச ஏசி திட்டம் எப்போது? மத்திய அரசு கொடுத்த விளக்கம் – Modi AC Yojana Reality
Modi AC Yojana Reality- மோடி ஏசி யோஜனா 2025 என்ற பெயரில் மத்திய அரசு 1.5 கோடி மக்களுக்கு 5 நட்சத்திர ஏசிகளை இலவசமாக வழங்க உள்ளதாக ஒரு தகவல் பரவலாகச் சுற்றி வருகிறது.
இந்தச் செய்தி உங்களை வந்தடைந்திருந்தால், கவனமாக இருங்கள். இது முற்றிலும் பொய்யான செய்தி.
இதுகுறித்து PIB Fact Check அதிகாரப்பூர்வ பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் முற்றிலும் தவறானது என PIB உண்மை சரிபார்ப்பு தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் முற்றிலும் பொய் என்று கூறியுள்ள அவர்கள், “இலவச 5 நட்சத்திர ஏர் கண்டிஷனர்களை வழங்கும் எந்த திட்டத்தையும் மின்சார அமைச்சகம் அறிவிக்கவில்லை” என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
சரிபாருங்கள் :
அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது PIB Fact Check போன்ற நம்பகமான ஆதாரங்கள் மூலம் தகவல்களை சரிபார்க்கலாம்.
இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
எனவே, இதுபோன்ற தகவல்களைப் பகிரும் முன் கவனமாக இருக்க வேண்டும்.
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே, இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும்.
அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் என்பதை மக்கள் உணர வேண்டும்.
எனவே, சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை கண்மூடித்தனமாக நம்புவதை தவிர்க்க வேண்டும்.
Summary:
A viral social media claim stating the Indian government, under “Modi AC Yojana 2025,” is distributing 1.5 crore free 5-star air conditioners is false.
The Press Information Bureau’s (PIB) Fact Check has clarified that the Ministry of Power has not announced any such scheme, debunking the misinformation circulating online.