ரூம் போட்டு இரவு முழுவதும் காத்திருந்த ஓபிஎஸ்.! ஷாக் கொடுத்த அமித்ஷா
திமுகவும் அதிமுகவும் கூட்டணியா? தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தயாராகி வருகின்றன. இன்னும் ஒரு வருடத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆட்சியைப் பிடிக்க திமுக வியூகம் வகுக்கிறது.
200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து, கூட்டணி கட்சிகளைச் சமாளித்து கூட்டணியைத் தக்கவைக்க முயற்சிக்கிறது.
திமுகவின் பலமான கூட்டணியை எதிர்கொள்ள அதிமுக கூட்டணி இன்னும் முழுமை பெறவில்லை. பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது.
முதற்கட்டமாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இதனால் அதிமுக கூட்டணி சற்று தடுமாற்றத்துடன் காணப்படுகிறது.
அதிமுக தலைவர்கள் பிரிந்து இருப்பதால் வாக்குகள் சிதறும் அபாயம் உள்ளது. ஆகையால், ஒருங்கிணைந்த அதிமுக வெற்றிக்கு உதவும் என அமித்ஷா கூறியுள்ளார்.
ஆனால், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை சேர்க்க வாய்ப்பில்லை என இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் சென்னை வந்துள்ள அமித்ஷா அவர்களைச் சந்தித்துப் பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காத்திருந்த ஓபிஎஸ் :
அமித்ஷாவைச் சந்திக்க ஓ.பன்னீர் செல்வம் நட்சத்திர விடுதியில் காத்திருந்ததாகவும், அவருக்கு அழைப்பு வரவில்லை என்றும் சவுக்கு சங்கர் கூறியுள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், “எல்லாம் இறைவன் கையில்” என்று கூறிச் சென்றார்.