Pink Moon : நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்!
இந்தியாவில் நாளை, ஏப்ரல் 13ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் வானில் ‘இளஞ்சிவப்பு நிலவு’ எனப்படும் ஒரு அரிய வானியல் நிகழ்வு நிகழவுள்ளது. இந்த முழு நிலவை நாம் வெறும் கண்களால் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தோன்றும் முழு நிலவுகளில் இதுவே மிகச் சிறியதாக இருக்கும்.
ஏனெனில், சந்திரன் பூமியிலிருந்து தனது அதிகபட்ச தொலைவான புள்ளியான ‘அபோஜி’யில் அப்போது அமைந்திருக்கும். இதன் காரணமாக இது ‘மைக்ரோ மூன்’ என்றும் அழைக்கப்படுகிறது.
வசந்த காலத்தின் முதல் முழு நிலவாக இது இருப்பதால், ‘பிங்க் நிலா’ என்று குறிப்பிடப்படுகிறது.
இருப்பினும், இது இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றாது. வட அமெரிக்காவில் வசந்த காலத்தில் பூக்கும் ‘ஃப்ளோக்ஸ் சுபுலாட்டா’ என்ற காட்டுப்பூ, ‘மோஸ் பிங்க்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த மலர்கள் வசந்த காலத்தின் தொடக்கத்தை அடையாளப்படுத்துகின்றன. இந்த மலர்களின் பின்னணியிலேயே இந்த நிலவுக்கு ‘பிங்க் மூன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.
மற்ற முழு நிலவுகளின் பெயர்கள்:
‘பிங்க் மூன்’ போல, ஒவ்வொரு மாதமும் தோன்றும் முழு நிலவுக்கும் ஒரு தனித்துவமான பெயர் சூட்டப்படுவது வழக்கம்.
இந்த பெயர்கள் பெரும்பாலும் அந்தந்த மாதங்களில் நிகழும் இயற்கை நிகழ்வுகள் அல்லது விவசாய சுழற்சிகளை அடிப்படையாகக் கொண்டவை.
உதாரணமாக, ஜனவரியில் தோன்றும் முழு நிலவு ‘ஓநாய் நிலவு’ (Wolf Moon) என்றும், ஜூலையில் தோன்றும் முழு நிலவு ‘ஆண் மான் நிலவு’ (Buck Moon) என்றும் அழைக்கப்படுகின்றன.
இதுபோல, ஒவ்வொரு முழு நிலவுக்கும் ஒரு சுவாரஸ்யமான பின்னணி பெயர் உண்டு.
Summary:
India will witness a rare astronomical event called the Pink Moon on April 13th at around 5 AM.
This full moon, visible to the naked eye, will be the smallest full moon of the year, also known as a ‘Micro Moon’ because the moon will be at its farthest point from Earth (apogee).
Despite its name, the Pink Moon will not appear pink. It’s named after the ‘Moss Pink’ wildflower (Phlox subulata) that blooms in North America during early spring, marking the season’s beginning.