பிரியங்கா தேஷ்பாண்டேவின் புதிய வாழ்க்கை! மனம் திறந்த பேட்டி! – Priyanka Deshpande New Life
Priyanka Deshpande New Life : விஜய் டிவி புகழ் பிரியங்கா, ஜீ தமிழில் இருந்து வந்தார். முதல் கணவர் பிரவீன் குமார் விஜய் டிவியில் தயாரிப்பாளர். 2017ல் திருமணம், கருத்து வேறுபாடு, 2022ல் விவாகரத்து.
பிக் பாஸில் அம்மா மட்டும் வந்தார். பிரவீன் விஜய் டிவியில் வேலை பார்ப்பதால் வரவில்லை என காரணம் கூறப்பட்டது.
பின்னர் பிரிந்தது தெரிய வந்தது. பிரியங்கா தன்னை தங்கமாக பார்த்துக்கொள்ளும் அன்பானவரை எதிர்பார்ப்பதாக கூறினார்.
பிரியங்கா – வசி திருமணம்:
இந்நிலையில், பிரியங்காவுக்கும் டிஜே வாசிக்கும் கடந்த வாரம் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.
வசி இலங்கையைச் சேர்ந்த தமிழர் என்றும், அரசியல் பின்புலம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
வாசி சொந்தமாக நடத்தி வரும் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பிரியங்கா இலங்கை சென்றபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
அது நாளடைவில் காதலாக மாறி இப்போது திருமணத்தில் முடிந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியங்காவின் இரண்டாவது கணவர் வசியைப் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது பிரியங்கா தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எனது திருமணத்திற்குப் பிறகு என் மனநிலை மிகவும் சந்தோஷமாக உள்ளது. நான் மிகவும் ஜாலியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், திருமணம் முடிந்த கையோடு வசியும் பிரியங்காவும் அமீர் – பாவனி திருமண வரவேற்பு விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
பாவனி – அமீர் திருமணத்தில் கணவருடன் பிரியங்கா :
பாவனி திருமணத்தை பிரியங்காவும் கணவரும் சிறப்பாக நடத்தினர். தம்பதிகள் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டும், அப்போதுதான் காதல் அழகாகும் என்று பிரியங்கா அறிவுரை கூறினார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Summary:
Popular Tamil television host Priyanka Deshpande, known for her work on Vijay TV, has opened up about her happiness after her recent marriage to DJ Vasi.
This is her second marriage, following a previous divorce in 2022. Priyanka shared that she is very happy and enjoying her married life.
She and Vasi also attended the wedding reception of actors Pavani and Ameer, where Priyanka emphasized the importance of friendship in a marital relationship.