You are currently viewing விபத்து இல்லா சாலைகள்: மத்திய அரசின் முயற்சி!

விபத்து இல்லா சாலைகள்: மத்திய அரசின் முயற்சி!

0
0

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் ஓட்டுநர்கள் பற்றாக்குறையும், அதனால் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டினார்.

உலக வங்கி அறிக்கையின்படி, நாட்டில் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை உள்ளது என்றும், முறையான ஓட்டுநர் பயிற்சி வசதிகள் இல்லாததால் ஆண்டுதோறும் சுமார் 1.8 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த அவல நிலையை மாற்ற, நாடு முழுவதும் 4,500 கோடி ரூபாய் செலவில் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை அமைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,600 நிறுவனங்களை படிப்படியாக அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 60 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IDTRs), பிராந்திய ஓட்டுநர் பயிற்சி மையங்கள் (RDTCs) மற்றும் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் (DTCs) ஆகியவற்றை அமைக்க, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உரிய திட்டங்களை அனுப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Summary : The central government has launched a ₹4,500 crore scheme to establish 1,600 driver training institutes across India to combat a reported 22 lakh driver shortage. Union Minister Nitin Gadkari stated in the Lok Sabha that inadequate training contributes to the approximately 1.8 lakh annual road accident deaths. The initiative aims to improve driver skills, enhance road safety, and generate over 60 lakh employment opportunities.

Leave a Reply