You are currently viewing Satellite Toll Collection – நிதின் கட்கரி-டோல்கேட் அதிரடி!

Satellite Toll Collection – நிதின் கட்கரி-டோல்கேட் அதிரடி!

0
0

இனி டோல்கேட்களில் நிற்க வேண்டிய அவசியமில்லை! 2 வாரங்களில் அமல்! வெளியான சூப்பர் அறிவிப்பு! – Satellite Toll Collection

தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் :

இந்தியாவில் இருக்கக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாமே மத்திய அரசாங்கத்துடைய தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தோட நேரடி மேற்பார்வையில்தான் இயங்கிட்டு வருது.

இந்த அமைச்சகம்தான் நெடுஞ்சாலை ஆணையங்கள் மூலமா தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில சுங்கச்சாவடிகளை அமைச்சு கட்டணம் வசூலிக்கிறதுக்கான அனுமதியையும் கொடுத்திருக்காங்க.

நம்ம இந்தியா முழுவதுமே நாலு வழிச்சாலை, ஆறு வழிச்சாலை, எட்டு வழிச்சாலைன்னு நிறைய புதுப்புது சாலைகளைப் போட்டிருக்காங்க.

இப்படி உருவாக்கப்பட்ட ஒரு லட்சத்து நாற்பத்தி ஆறாயிரத்து நூற்றி நாற்பத்தி அஞ்சு கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள்ல மொத்தம் ஆயிரத்து இருநூத்தி இருபத்தெட்டு சுங்கச்சாவடிகள் இருக்கு.

நிதின் கட்கரி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சாலைகளில் சுங்கச்சாவடிகள் இருந்த போதிலும், முக்கிய சுங்கச்சாவடிகளில் அடிக்கடி நீண்ட வாகன வரிசைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் இது மிகவும் மோசமாக உள்ளது.

இந்த சிக்கலை தீர்க்க, அடுத்த இரண்டு வாரங்களில் செயற்கைக்கோள் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

புதியதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த முறையின் மூலம், வாகனங்கள் இனி சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை.

அதற்குப் பதிலாக, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, செயற்கைக்கோள் மூலமாக கட்டணங்கள் தானாகவே வசூலிக்கப்படும்.

இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் எவ்விதத் தடங்கலும் இன்றி பயணிக்க முடியும்.

Summary:

India is set to implement satellite toll collection within two weeks, eliminating the need for vehicles to stop at toll booths. This new system, announced by Union Minister Nitin Gadkari, aims to reduce traffic congestion and improve travel efficiency on national highways by automatically deducting toll fees via satellite technology.

Leave a Reply