உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி, பரோட்டா அதிகமாக செய்யுமா? அதே பழைய சைடு டிஷ் செய்துகொண்டு போரடித்துவிட்டதா?
அப்போ, இந்த சுவையான & எளிய குருமாவை 15 நிமிடத்தில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, பிரியாணி இலை
சோம்பு – 1/4 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு – நறுக்கியது
உப்பு, கொத்தமல்லி – தேவையான அளவு
அரைக்க: தேங்காய், முந்திரி, சோம்பு
செய்முறை:
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி மசாலா பொருட்கள் தாளிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
காய்கறிகளை சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.
தேங்காய், முந்திரி, சோம்பு விழுதை அரைத்து சேர்க்கவும்.
மசாலா தூள்கள், உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
தேவையான அளவு நீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சுவையான வெஜ் குருமா ரெடி! இது சப்பாத்தி, பூரி, பரோட்டா, நாண் உடன் அட்டகாசமாக இருக்கும்.
செய்து பார்த்து எப்படி இருந்தது என்று கமெண்ட்ல சொல்லுங்க.