You are currently viewing Tamil Cinema History – 4 முதலமைச்சர்கள்  ஒரே படத்தில்!

Tamil Cinema History – 4 முதலமைச்சர்கள் ஒரே படத்தில்!

0
0

தமிழ்நாட்டை ஆட்சி செய்த 4 முதலமைச்சர்கள் இணைந்து நடித்த ஒரே ஒரு தமிழ் படம் – எது தெரியுமா? Tamil Cinema History

Tamil Cinema History – சினிமாவில் பல நடிகர்கள் இணைந்து நடிக்கும் படங்கள் இப்போது மிகவும் சாதாரணமாகிவிட்டன.

ஒரு திரைப்படம் இந்தியா முழுவதும் சென்றடைய வேண்டுமென்றால், பல மொழி நடிகர்களை நடிக்க வைப்பது அவசியமாகிறது.

ஆனால் 1970-களிலேயே ஒரு சிறப்பு வாய்ந்த பல நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் வெளிவந்தது உங்களுக்குத் தெரியுமா?

அந்தத் திரைப்படத்தில் தமிழ்நாட்டின் நான்கு முக்கியமான முதலமைச்சர்களான அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா, மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் நடித்திருந்தனர். அந்தத் திரைப்படம் என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.

MGR – ஜெயலலிதா நடித்த எங்கள் தங்கம் :

அந்தத் திரைப்படத்தின் பெயர் ‘எங்கள் தங்கம்’. இதனை இயக்கியவர்கள் கிருஷ்ணன் மற்றும் பஞ்சு.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்த இந்தத் திரைப்படத்தை தயாரித்தவர் முரசொலி மாறன்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் 1970ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியானது.

திரையரங்குகளில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிவாகை சூடியது. மேலும், இந்தத் திரைப்படத்திற்கு மூன்று தமிழக அரசு விருதுகளும் கிடைத்தன.

4 தமிழக முதல்வர்கள் நடித்த படம் எங்கள் தங்கம் :

இந்தத் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களான ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்த எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பிற்காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக ஆட்சி புரிந்தனர்.

அதேபோல, இந்த படத்தின் இறுதிக்காட்சியில் அண்ணாதுரையும் கலைஞர் கருணாநிதியும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார்கள். இவர்களும் தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்கள் ஆவர்.

இவ்வாறு நான்கு தமிழக முதலமைச்சர்கள் நடித்த ஒரே திரைப்படம் என்ற சிறப்பை “எங்கள் தங்கம்” பெற்றுள்ளது.

சம்பளமே வாங்காமல் நடித்த MGR – Jayalalitha

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் “எங்கள் தங்கம்” படத்துக்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கிக்கலையாம். இந்த படத்துல எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைச்ச “நான் செத்து பிழைச்சவன் டா” பாட்டு, 1967ல எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை துப்பாக்கியால சுட்ட சம்பவத்தை மையமா வெச்சு வாலி எழுதினது.

இந்த படத்தோட இன்னொரு ஸ்பெஷல் என்னன்னா, இதுல இருக்கிற ஆறு பாட்டையும் டி.எம்.செளந்தர்ராஜன் தான் பாடியிருக்கார்

Leave a Reply