You are currently viewing மும்மொழியில் வாழ்த்து கூறிய தமிழிசை – முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து!

மும்மொழியில் வாழ்த்து கூறிய தமிழிசை – முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து!

0
0

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72வது பிறந்த நாளையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன்படி, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன், அதிகாலை 12.02 மணிக்கு தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் மும்மொழிகளில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அவர் பகிர்ந்துள்ள வாழ்த்து:
“மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!”
“Wishing the Honourable Chief Minister Thiru M.K. Stalin a very happy birthday!”
“గౌరవనీయ ముఖ్యమంత్రి శ్రీ మு.క. స్టాలిన్ గారికి హృదయపూర్వక జన్మదిన శుభాకాంక్షలు!”

மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தெலுங்கு உட்பட மும்மொழிகளில் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.

முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோள்

தமது பிறந்த நாளையொட்டி வெளியிட்ட வீடியோ செய்தியில், முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாடு தற்போது மொழிப்போர், தொகுதி மறுசீரமைப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. தென்மாநிலங்கள் வளர்ச்சி அடைந்ததால், தொகுதி எண்ணிக்கையை குறைக்க முடியாது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்படக்கூடாது. தமிழ்நாடு இந்த போராட்டத்தில் முன்னிலை வகிக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டுக்கான நிதியுதவி குறைக்கப்பட்டுள்ளதையும், மும்மொழிக் கொள்கை ஊர்க்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், “தமிழ்நாட்டின் உரிமைக்காக நாம் அனைவரும் ஒன்றாக போராட வேண்டும். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்!” என உறுதிபட தெரிவித்துள்ளார்.

Leave a Reply