நெருங்கும் தீபாவளி பண்டிகை – மழை ஆட்டம் ஆரம்பம்! இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

0064.jpg

தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில், தமிழ்நாட்டில் மழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால், இன்று (அக்டோபர் 18) தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அருகில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. அது பின்னர் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, தீபாவளி நாளில் தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்றைக்கு மட்டும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Summary :
IMD predicts heavy rain in 9 Tamil Nadu districts before Diwali; moderate showers expected in Chennai with thunder and lightning.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *