23 கிமீ தான் லிமிட்! செண்பகம்பேட்டை சுங்கச்சாவடி அகற்ற ஐகோர்ட் உத்தரவு

0534.jpg

வாகன ஓட்டிகளுக்கு குதூகல செய்தி!

மதுரை: சிவகங்கை மாவட்டம் செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒரு சுங்கச்சாவடியிலிருந்து 23 கி.மீ. தூரத்திற்குள் அமைந்துள்ள மற்றொரு சுங்கச்சாவடி விதிமீறல் என்பதால், இதனை நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளின் விதிமீறல்!

தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும் சில சுங்கச்சாவடிகள் ஒப்பந்த காலம் முடிந்தும் கட்டணம் வசூலிப்பதோடு, தொலைவுப் பரப்புக்கு உட்படாமல் அமைக்கப்பட்டுள்ளன என்பதாக பொதுமக்களிடையே பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், செண்பகம்பேட்டை சுங்கச்சாவடி, புதுக்கோட்டை மாவட்டம் லெம்பலக்குடி சுங்கச்சாவடியில் இருந்து வெறும் 23 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, இது தேசிய நெடுஞ்சாலை விதிகளை மீறியதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, சுங்கச்சாவடியை அகற்றக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

ஐகோர்ட் தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ஜோதிராமன் ஆகியோர், சுங்கச்சாவடிகள் எந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கான முடிவை தேசிய நெடுஞ்சாலை ஆணையமே விதிமுறைகளின் அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

லெம்பலக்குடி சுங்கச்சாவடி 2011 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. ஆனால், 2017 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியே விதிகளை மீறியதாக காணப்படுகிறது. எனவே, தனி நீதிபதியின் முந்தைய உத்தரவை ரத்து செய்து, செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும்” என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

இதனுடன் வழக்கையும் முடித்து வைக்கப்பட்டது.

வாகன ஓட்டிகளுக்கு கிடைத்த நற்செய்தி!

இந்த தீர்ப்பால், சுங்கச்சாவடி கட்டணத்தால் அவதிப்படும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிவாரணம் கிடைத்துள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் விதிகளை மீறி செயல்படும் மற்றொரு சுங்கச்சாவடிகளுக்கும் இது முக்கிய தீர்ப்பாக அமையக்கூடும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *