விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலின் மருத்துவ மையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப, இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மொத்தம் 6 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள இந்து சமயத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் நவம்பர் 24, 2025க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் & தகுதிகள்
1. மருத்துவர் – 2 இடங்கள்
-
தகுதி: MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்
-
சம்பளம்: ₹36,700 – ₹1,16,200
2. உதவி செவிலியர் – 2 இடங்கள்
-
தகுதி: Auxiliary Nurse & Midwife Certificate அல்லது Nursing Diploma
-
சம்பளம்: ₹18,500 – ₹58,600
3. நர்சிங் அசிஸ்டெண்ட் – 2 இடங்கள்
-
தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Health Worker Certificate
-
சம்பளம்: ₹11,600 – ₹36,800
வயது வரம்பு:
18 முதல் 45 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
-
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய: melmalayanurangalamman.hrce.tn.gov.in
-
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர், விழுப்புரம் – 604204.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
24 நவம்பர் 2025
Summary :
TN HRCE Department invites applications for 6 posts at Melmalayanur Angalamman Temple. 12th pass to MBBS eligible. Apply before Nov 24, 2025.









