பெங்களூரில் இருந்து கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் – தப்பியோடிய நபர் தேடப்பட்டு வருகின்றார்

0008.jpg

பெங்களூரிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட புகையிலை போதைப் பொருட்கள் காவல்துறையால் சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடத்தல் தொடர்பான தகவல்

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்புக் குழுவுக்கு பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக புகையிலை போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து,நெடுஞ்சாலை ரோந்து குழு
சோதனை சாவடி போலீசார்இணைந்து மாவட்ட எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

காருடன் பொருட்கள் பறிமுதல்

போலீசாரை கண்டதும், சந்தேகமான கார் தப்பிச் செல்ல முயன்றது.
போலீசார் காரை துரத்தி மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.
காருக்குள் 400 கிலோ புகையிலை போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ₹5 லட்சம் ஆகும்.
புகையிலை பொருட்களுடன் கார் கைப்பற்றப்பட்டது.

தப்பியோடிய நபர் தேடல்

சம்பவத்துக்குப் பின்னர், காரில் இருந்த நபர் தப்பியோடிவிட்டார்.
தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் சம்பந்தப்பட்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *