அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் வசந்த காலத்திற்கு முன் பூக்கும் பிரபலமான யொஷினோ செர்ரிப் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. அங்கு திரும்பும் இடமெல்லாம் அந்தப் பூக்கள் தான் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்கள் மலர்ந்து அழகாக காட்சி அளிக்கின்றன.
மேலும் சில தகவல்கள் :
- யொஷினோ செர்ரிப் பூக்கள் வாஷிங்டன் நகரின் அடையாளங்களில் ஒன்று.
- அங்கு ஆயிரக்கணக்கான செர்ரி மரங்கள் நடப்பட்டு உள்ளன.
- அந்த மலர்கள் சுமார் 70 விழுக்காடு பூத்த நிலையில் கொள்ளை அழகாக காட்சியளிக்கின்றன.
- அந்த அழகிய காட்சிகள் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளை, இளஞ்சிவப்பு கம்பளம் போல் காட்சியளிக்கிறது.
- 1912 ஆம் ஆண்டு ஜப்பானிய தலைநகர் டோக்கியோ நகர மேயர் யொஷினோ செர்ரி மரங்களை நட்பு ரீதியாக அமெரிக்காவுக்கு கொடுத்தார்.
- ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இறுதிக்கட்டத்தில் அவை பூக்கத் தொடங்குகின்றன.
- கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குள் பூக்கள் முழுமையாக மலர்ந்துவிடும்.
- அடுத்த சில வாரங்களில் அவை உதிர்ந்துவிடும்.
- ஜப்பானில் செர்ரி பூக்கள் சக்குரா (‘Sakura’) மலர்கள் என்றும் அழைப்பார்கள்.
- ஜப்பானில் இது தேசிய மலராக கருதப்படுகிறது.
Summary: Washington D.C. is experiencing its peak Yoshino cherry blossom season, with thousands of trees blooming in white and pink, creating a stunning visual spectacle. The blossoms, a gift from Japan, are nearing their full bloom, attracting many visitors.