You are currently viewing “தம்பி அண்ணாமலை கேள்விக்கு பதில் என்ன?” – சீமானின் கேள்விகள் பரபரப்பு!

“தம்பி அண்ணாமலை கேள்விக்கு பதில் என்ன?” – சீமானின் கேள்விகள் பரபரப்பு!

0
0

வேலூர்: “தம்பி அண்ணாமலை கேட்பதற்கு பதில் என்ன? நீங்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “திமுக, இந்தி திணிப்பு விவகாரத்தில் நாடகம் நடித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் மட்டுமே இது குறித்து பேசுகிறது. மத்தியில் ஆட்சி அமைத்தபோது, கட்டாய இந்தி திணிப்பை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததா? மாநில மொழிகளை ஆட்சி மொழியாக்க போராடியதா? இப்போது திடீரென்று இந்தி திணிப்பு புதிதாக வந்ததா?

நீங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த நிலைப்பாட்டில் இருக்கின்றன? எத்தனை காலம் இந்த நாடகத்தை மக்கள் நம்பவேண்டும்? அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு உங்கள் பதில் என்ன? நீங்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக உள்ளதா? அங்கு தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறதா?” எனக் கேள்விகள் எழுப்பினார்.

மேலும், “எங்கள் கொள்கை தெளிவானது – தமிழையே கற்போம், தமிழராய் வாழ்வோம். ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தாய் மொழியே கல்வி மொழியாக இருக்க வேண்டும். மும்மொழிக் கொள்கையில் எங்கள் மொழிக்கு என்ன நிலை? ‘நம்ம Chennai, நம்ம ஸ்கூல்’ என்கிறீர்கள், இது தமிழை வளர்க்கும் முறைதானா? எவ்வளவு நாட்கள் இந்த நாடகத்தை நடத்துவீர்கள்?” எனக் காட்டமாக பேசியுள்ளார்.

முன்னதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மக்களைக் குழப்புவதே திமுகவின் தொழில். தங்கள் குடும்பத்துக்கு ஒரு விதி, தமிழக மக்களுக்கு இன்னொரு விதி. மூன்று மொழிகள் கற்பிக்கும் CBSE, மெட்ரிகுலேஷன் பள்ளிகளை அவர்கள் நடத்துவார்கள். தங்கள் குழந்தைகளையும் அத்தகைய பள்ளிகளில் சேர்ப்பார்கள்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply