உங்க அக்கவுன்ட்டை வாட்ஸ்அப் ஏன் தடை செய்தது என்று தெரியவில்லையா…? அதற்கான காரணங்கள் இதோ…!
வாட்ஸ்அப் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான கணக்குகள் தடை செய்யப்பட்ட தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
இப்படி முடக்கப்பட்ட கணக்குகளை உபயோகிப்பவர்கள் சாதாரண வாட்ஸ்அப் பயனர்களைப் போன்றவர்கள் தான்.
இருப்பினும், வாட்ஸ்அப் விதிமுறைகளை மீறும் போது, அதாவது எத்தகைய படங்கள், உள்ளடக்கங்கள் அல்லது உரையாடல்களை அனுப்ப வேண்டும் என்பதில் கவனம் செலுத்தாத போது அவர்களின் கணக்குகள் தடை செய்யப்படுகின்றன.
பயனர்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க, மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பிரபலமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியை நாடுகிறது.
இதன் மூலம், வாட்ஸ்அப் உரையாடல்களில் உள்ள உள்ளடக்கம் அல்லது மீடியா கோப்புகளை பார்க்காமலேயே, அவை தடை செய்யப்பட வேண்டுமா இல்லையா என்பதை வாட்ஸ்அப் இந்த முறையின் மூலம் கண்டறிகிறது.
ஆகையால், கடந்த சில ஆண்டுகளில் ஒருவேளை உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்பட்டிருந்தால், அதற்கான சில முக்கிய காரணங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
முக்கியமான 4 பதிவுகள் :
1.மற்றவர்களின் சம்மதம் இல்லாமல் அவர்களின் தொடர்பு எண்களை உங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டாம்.
2.தேவையற்ற மற்றும் தொந்தரவு அளிக்கும் ஸ்பேம் செய்திகளை அனுப்புவதை தவிர்க்கவும்.
3.அதிகாரப்பூர்வமற்ற, மாற்றியமைக்கப்பட்ட வாட்ஸ்அப் செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது.
4.நீண்ட காலமாக ஃபார்வேர்ட் செய்யப்பட்ட செய்திகளைப் பரப்புவதில் கவனம் தேவை.
Summary:
WhatsApp regularly bans numerous accounts for violating its terms of service, often due to inappropriate content or unsolicited messages.
The platform now uses artificial intelligence to monitor user activity and identify accounts that should be banned without directly viewing message content.
Common reasons for account suspension include adding contacts without consent, sending spam, using unofficial WhatsApp apps, and excessively forwarding old messages.